Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சபரிமலை சீசனையொட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப்படும் என தெரிவிப்பு

சபரிமலை சீசனையொட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப்படும் என தெரிவிப்பு

By: vaithegi Tue, 14 Nov 2023 12:24:00 PM

சபரிமலை சீசனையொட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை  இயக்கப்படும் என தெரிவிப்பு

சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை திருநெல்வேலி- சென்னை இடையேயான தொடங்கப்பட்டது. இதனை அடுத்து வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும்

இந்த ரயில், நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.

vande bharat special service,sabarimala ,வந்தே பாரத் சிறப்பு சேவை,சபரிமலை

இந்த நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையே வருகிற நவ.16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

மேலும் எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15க்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15க்கு எழும்பூர் வந்தடையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :