வேதாரண்யம் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத சுறா
By: Nagaraj Mon, 28 Dec 2020 8:41:18 PM
கடல் எப்போதும் தன்னுள் ஆச்சரியத்தை உள்ளடக்கியது. மீனவர்கள் வலையில் அவ்வபோது அதிசயப்பட வைக்கும் வகையில் மீன் வகைகள் சிக்கும்.
அந்தவகையில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் ராட்சத சுறா மீன் ஒன்று இன்று (டிச.28) சிக்கியது.
கோடியக்கரையில் வடகிழக்கு பருவக்கால மீன்பிடி பருவம் நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற மீனவர்கள் விரித்த வலையில் ராட்சத சுறா
சிக்கியது. திங்கள்கிழமை படகு துறையில் சேர்க்கப்பட்ட இந்த சுறாவை,
படகிலிருந்து மரக் கழிவுகளில் இணைத்துத் தூக்கி கரை சேர்த்தனர்.
நிகழாண்டு பருவத்தில் பிடிபட்ட மீன்களில் சுமார் 80 கிலோ எடையுள்ள இந்த சுறா தான் பெரியது.
Tags :
shark |
trapped |