Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

By: Monisha Thu, 12 Nov 2020 2:49:13 PM

இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (வயது22). இவரது நண்பர்கள் பாபு (20), புனித்பாபு (18), கமலேசன்(19) ஆவர். இவர்கள் 4 பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையில் உள்ள பால்எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பெங்களூரில் இருந்து நேற்று இரவில் புறப்பட்டுள்ளனர்.

இதில் பால்எபினேசர், பாபு ஆகியோர் ஒரு வாகனத்திலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் ஒரு வாகனத்திலும் வந்துள்ளார்கள். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்ற இடத்தில் நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர்.

motorcycle,accident,teenagers,kills,investigation ,இருசக்கர வாகனம்,விபத்து,வாலிபர்கள்,பலி,விசாரணை

அப்போது பால்எபினேசர், பாபு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|