திருப்பூரில் இன்று வாகன தணிக்கை மும்முரம்
By: Nagaraj Sat, 18 Feb 2023 10:31:31 PM
திருப்பூர்:விமானம் மூலம் காலை மதுரை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை கிளம்பினார்
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈசா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விமானம் மூலம் வருகை தந்தார். அவரது வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
‘இந்நிலையில் கோவை மாவட்டம் திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகே போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். பாதுகாப்பு கருதி பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது .
Tags :
police |
tirupur |