விதிமுறைப்படி வாகன பதிவு பலகை... வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
By: Nagaraj Sat, 25 Feb 2023 7:52:43 PM
சென்னை: விதிமுறைபடி இல்லாத நம்பர் பிளேட்... கடந்த ஒரு மாதமாக வாகன பதிவு பலகைகளை பராமரிக்காதவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண் பலகைகளில் கட்சி தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பலர் எழுதி வைத்துள்ளனர். இன்னும் சிலர் அரசாங்க விதிமுறைகளுக்கு எதிராக எண்களை மிகச் சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாகவோ அமைக்கின்றனர்.
இதுபோன்ற பதிவு எண் கொண்ட வாகனங்களை பிடித்து உரிய அறிவுரை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் பணிகள் நடந்தன.
கடந்த ஒரு மாதமாக வாகன பதிவு பலகைகளை பராமரிக்காதவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முறைகேடாக நம்பர் பிளேட் அமைக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.