கலிபோர்னியா கடல் பகுதியில் படகு தீப்பிடித்து மூழ்கிய விபத்தில் தீர்ப்பு
By: Nagaraj Wed, 08 Nov 2023 7:18:16 PM
அமெரிக்கா: படகு கேப்டன்தான் குற்றவாளி... அமெரிக்காவில் கலிஃபோர்னியா கடல் பகுதியில் படகு ஒன்று தீப்பிடித்து மூழ்கி 34 பேர் உயிரிழந்த வழக்கில் படகு கேப்டன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என நீதித் துறை அதிகாரி தெரிவித்தார்.
லாஸ்ஏஞ்சலீஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தனது கடமையைச் செய்யத் தவறியதாக 70 வயதான படகு கேப்டன் ஜெர்ரி பாய்லான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
2019-ல் ஏற்பட்ட இந்த விபத்து, கலிஃபோர்னியா கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான படகு விபத்து என்று கருதப்படுகிறது.
Tags :
guilty |
captain |