Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை அருகில் நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை அருகில் நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

By: Karunakaran Fri, 27 Nov 2020 1:18:20 PM

சென்னை அருகில் நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி, பல பகுதிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டன. மேலும் தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் பெருகியுள்ளது.

இந்நிலையில், புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார்சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சென்னையின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டது எனவும், இவை நிவர் புயலின் கோர காட்சிகள் என கூறி பகிரப்பட்டு வருகிறது.

viral video,social media,nivar storm,chennai ,வைரல் வீடியோ, சமூக ஊடகங்கள், நிவார் புயல், சென்னை

இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, அது பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டது ஆகும். முன்னதாக இதே வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலானது.

அதன்படி வைரல் வீடியோ நிவர் புயலின் போது சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :