விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆக முடியாது; சரத் பொன்சேகா எச்சரிக்கை
By: Nagaraj Sat, 29 Aug 2020 08:06:50 AM
பிரபாகரன் ஆக முடியாது... சி.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட
விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்கொள்ள வேண்டி
ஏற்படும். நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள்
அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது.
விக்னேஸ்வரன்
ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது. அவருக்கு அதற்கான வயதுமில்லை. காலமும்
இல்லை. உங்களிடம் உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். நாட்டிலுள்ள
சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவ்வாறு குறைத்து
மதிப்பிட்டால் மோசமான விளைவுகளை நிச்சயம் நீங்கள் எதிர்கொள்வீர்கள்” என
அவர் குறிப்பிட்டுள்ளார்.