Advertisement

சிலிண்டர் விலை அதிகரிப்புக்கு விஜயகாந்த் கண்டனம்

By: vaithegi Wed, 01 Mar 2023 3:08:08 PM

சிலிண்டர் விலை அதிகரிப்புக்கு விஜயகாந்த் கண்டனம்


சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1068-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1118.50-ஆக அதிகரித்துள்ளது.வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.எனவே இதன்மூலம் ரூ.1068-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1118.50-ஆக அதிகரித்துள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுராவில் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்த உடனே சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vijayakanth,cylinder ,விஜயகாந்த் ,சிலிண்டர்

இதையடுத்து அந்த அறிக்கையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமலிருந்தது.

தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பலமடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் சுமையை தலை மீது ஏற்றுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வால் அத்திவாசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து தமிழக மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாமல் திணறி கொண்டு வருகின்றனர். தற்போது எரிவாயு சிலண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :