Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பால் விநியோக தாமத்திற்கு அமைச்சர் நாசர் முழு பொறுப்பேற்று பதிலை அளிக்க .. விஜயகாந்த் வலியுறுத்தல்

பால் விநியோக தாமத்திற்கு அமைச்சர் நாசர் முழு பொறுப்பேற்று பதிலை அளிக்க .. விஜயகாந்த் வலியுறுத்தல்

By: vaithegi Sat, 25 Feb 2023 7:51:51 PM

பால் விநியோக தாமத்திற்கு அமைச்சர் நாசர் முழு பொறுப்பேற்று பதிலை அளிக்க    ..  விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ஆவின் பால் தட்டுப்பாடு ...... தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதிக்கப்பட்டுள்ளதாவது, “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ்.நகர், அழகப்பன் நகர், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர், முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சுமார் 5 மணி நேரம் தாமதமான நிலையில், விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டு பால் கெட்டு போய் விடும் என்பதால், தாமதமாக வந்த பால் வண்டியை டெப்போ முகவர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

vijayakanth,paul ,விஜயகாந்த் ,பால்

இதனை அடுத்து ஆவின் பால் விநியோகம் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை கவனிக்காமல், தனது துறை சார்ந்த பணிகளை கிடப்பில் போட்டு விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பால் வளத்துறை அமைச்சர் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். இனியாவது துறை சார்ந்த பணிகளில் தனிகவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :