சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
By: Nagaraj Sun, 04 Oct 2020 6:14:55 PM
வன்முறை வெடித்தது... சிலியில் அரசுக்கு எதிராக 2 வது நாளாக தொடரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
புதிய அரசியலமைப்பு சட்டம் கோரியும் போக்குரவத்து கட்டண உயர்வு, போலீஸ் அத்துமீறல்களை கண்டித்தும் தொடங்கிய போராட்டம், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசுடனான
மோதலில் இளைஞன் ஒருவன், பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததையடுத்து கலவரம்
மூண்டது.
கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
Tags :
violence |
struggle |