Advertisement

தொலைநோக்கு பார்வை... மத்திய அமைச்சர் பெருமிதம்

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:10:39 PM

தொலைநோக்கு பார்வை... மத்திய அமைச்சர் பெருமிதம்

புதுடெல்லி : பிரதமரின் ஒரு தேசம், ஒரே ஆரோக்கியம் என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் நாம் கரோனா தொற்றை கூட்டாக கையாண்டு வெற்றி பெற்றோம். இந்த திங்கள்கிழமை வரை 220 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.


பாஜக அரசின் “ஆரோக்கியமான இந்தியா” வை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுகாதார பாதுகாப்பை முழுமையான சுகாதார பாதுகாப்பாக மாற்றுவதே என்பதே : பாஜக அரசின் நோக்கம்.

பிரதமரின் ஒரு தேசம், ஒரே ஆரோக்கியம் என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் நாம் கரோனா தொற்றை கூட்டாக கையாண்டு வெற்றி பெற்றோம். இந்த திங்கள்கிழமை வரை 220 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் உள்டங்கிய தொலைதூரத்து பகுதிகளுக்கும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வதில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சொலைதூர பகுதிகளுக்கு ரத்தம், தடுப்பூசிகள், மருந்து பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

Tags :