சூடானில் கர்ப்பிணி பெண்ணுக்கு காரிலேயே பிரசவம் பார்த்த தன்னார்வலர்கள்
By: Nagaraj Sat, 29 Apr 2023 11:30:33 AM
சூடான்: தன்னார்வலர்கள் செய்த உதவி... சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணி பெண் ஒருவர் காரில் குழந்தை பெற்றுள்ளார்.
சூடானில் 2 வாரங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு நைல் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த மனைவியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
வழியில், மருத்துவ சேவையாற்றி வந்த தன்னார்வலர்கள் 3 பேர் காரில் வைத்தே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அப்பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தன்னார்வலர்களை பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.
இதன் பேரில், வெற்றியாளன் என்பதை குறிக்கும் விதமாக, முண்டாஸிர் என்று குழந்தைக்கு தன்னார்வலர்கள் பெயர் சூட்டினர்.
Tags :
mundazir |
baby |
namers |
car |