Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

பீகார் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

By: Karunakaran Sat, 07 Nov 2020 08:51:17 AM

பீகார் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைகிறது. இதானல் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்தது. இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர்.

voting,final phase,bihar,assembly elections ,வாக்களிப்பு, இறுதி கட்டம், பீகார், சட்டமன்றத் தேர்தல்

1,200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், பீகார் சட்டசபைக்கு நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மூன்று கட்டமாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Tags :
|
|