Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேகாலயா, நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

மேகாலயா, நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

By: Nagaraj Mon, 27 Feb 2023 09:55:18 AM

மேகாலயா, நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுடெல்லி: மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனது. மொத்தம் 120 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயா பேரவைக்கு மொத்தம் 558 பேர் போட்டியிடுகின்றனர்.

polling,public,nagaland,meghalaya,has begun ,வாக்குப்பதிவு, பொதுமக்கள், நாகாலாந்து, மேகாலயா, தொடங்கியது

ஆளும் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. இந்நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags :
|