Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

அமெரிக்க விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

By: Karunakaran Wed, 04 Nov 2020 08:55:14 AM

அமெரிக்க விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாயிலாக 10 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், மேலும், ஆறு கோடி பேர் நேரில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில் 4.70 கோடி பேர் மட்டுமே தபால் ஓட்டுகளை அளித்தனர்.

voting,presidential election,america,trump ,வாக்களிப்பு, ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்கா, டிரம்ப்

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை, 9.40 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட 2 மடங்கு அதிகம்.

கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஓட்டுப் பதிவு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் புளோரிடாவில் வாக்களித்தார். உலகம் முழுவதும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags :
|