Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை... இதுவரை 4 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தகவல்

இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை... இதுவரை 4 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தகவல்

By: Nagaraj Mon, 16 Oct 2023 11:39:38 AM

இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை... இதுவரை 4 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தகவல்

நியூயார்க்: 4 லட்சம் பேர் வெளியேறினர்... இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் அடித்துப் பிடித்து வெளியேறி இருப்பதாக ஐ.நா கூறியுள்ளது.

இரவு பகலாக குண்டுகள் வீசப்பட்டு வரும் நிலையில், தாங்கள் இதுவரை நடத்தியுள்ள தாக்குதல் வெறும் ஆரம்பம் தான் என்று எச்சரித்துள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு.

எம் அம்பு கடிவிடுதும்.. நும் அரண் சேர்மின்.. என இஸ்ரேல் விடுத்த 24 மணி நேர கெடுவால் களேபரமாகி இருக்கிறது, வடக்கு காசா! "நாம் ஏன் நம் வீடுகளை விட்டு செல்ல வேண்டும், இங்கேயே இருப்போம்" என்று ஹமாஸ் எவ்வளவு கதறியும் கேட்காமல் இதுவரை 4 லட்சம் பேர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

international countries,support,israel,gaza,4 lakh people,un ,சர்வதேச நாடுகள், ஆதரவு, இஸ்ரேல், காஸா, 4 லட்சம் மக்கள், ஐநா சபை

காஸாவில் இதுவரை ஆயிரத்து 900 பேர் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளையும், உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு சென்றவர்களால் வடக்கு காசாவில் பல்வேறு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியது ஹமாஸ். மறுபுறம், காஸாவுக்குள் ரெய்டு சென்ற இஸ்ரேல் ராணுவத்தினர், ஹமாஸ் பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களின் சடலங்களை அதிரடியாக மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கவச வாகனங்களுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது ஹமாஸின் ஒரு முகாம் அழிக்கப்பட்டதாகவும், ராக்கெட் வீச்சு நடத்தி ஹமாஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் வெறும் ஆரம்பம் மட்டுமே என்று கூறியுள்ள அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு, இதுவரை இல்லாத அளவுக்கு பலத்துடன் தங்கள் எதிரிகளை தாக்க முடிவு செய்துள்ளதாகவும், சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|