Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயரும் என எச்சரிக்கை

அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயரும் என எச்சரிக்கை

By: vaithegi Sun, 01 Jan 2023 7:36:26 PM

அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயரும் என எச்சரிக்கை

இந்தியா: சீனாவை தற்போது பாடாய்படுத்தி வரும் கொரோனா புதிய திரிபு இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 4 பேருக்கு முதன் முதலில் கண்டறியப்பட்டது. மத்திய அரசும் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா எண்ணிக்கை உயர்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் அனைவரும் கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

corona,warning,central govt ,கொரோனா ,எச்சரிக்கை ,மத்திய அரசு

இதனை அடுத்து இதற்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகள் ஆகிய இல்லாமல் BF7 கொரோனா திரிபு ஒரு சமயத்தில் 16 பேருக்கு பரவும் அபாயம் கொண்டுள்ளது.

அரசு அறிவுறுத்தியதை போல மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது ஆகிய நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது இத்தொற்றின் தொடர்பு சங்கிலியை முறியடித்து இந்தியாவில் 4-ம் அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

Tags :
|