இளம் வீராங்கனை கால் அகற்றப்பட்டதற்கு தவறான சிகிச்சை காரணமா?
By: Nagaraj Mon, 14 Nov 2022 8:50:29 PM
சென்னை: சென்னையில் கால்பந்து இளம் வீராங்கனையின் கால் அகற்றப்பட்டதற்கு, தவறான சிகிச்சை காரணமா என்று விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி பிரியாவை அமைச்சர் நேரில் சந்தித்து விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசின் செலவில் செயற்கை கால் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. விளையாடும்போது தவறி விழுந்ததில் அவருக்கு வலது கால் பாதிக்கப்பட்டது.
கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது உறவினர்களின் புகாராகும். இதுகுறித்து விசாரணை அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.