Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

By: Monisha Fri, 12 June 2020 11:29:17 AM

12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி, மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி.யாகும். காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களும் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ம்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

mettur dam,water opening,cauvery delta,irrigation,farmers ,மேட்டூர் அணை,தண்ணீர் திறப்பு,காவிரி டெல்டா,பாசனம்,விவசாயிகள்

இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் 8 கண் மதகு பகுதியில் இருந்து மலர் தூவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீர் திறப்பின் போது முதலமைச்சருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

மேட்டூர் அணை திறப்பால், சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :