Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

By: Nagaraj Tue, 07 Mar 2023 5:37:56 PM

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்... அருந்ததியர் சமுதாய மக்கள் குறித்து சீமான் பேசியது சர்ச்சையில் உள்ள நிலையில், போரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதற்கு பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்களை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

naam,party,seeman, ,கற்கள், நாம் தமிழர், பாட்டில், தாக்குதல், போலீசார்

இதையடுத்து சீமானுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். ஆனால் இதுபற்றி பேசிய சீமான், தான் வரலாற்று சம்பவங்களை கூறியதாகவும், அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஆதித்தமிழர் கட்சியினர் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|
|
|