Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்க்கிறோம்... உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்

இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்க்கிறோம்... உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:18:37 PM

இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்க்கிறோம்... உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்

புதுடில்லி: உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்... உக்ரைன் மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்ப்பதாக உக்ரைன் அமைச்சர் எமினி சபோரோவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உக்ரைன் போர் நியாயமான முறையில் முடிவுக்கு வராவிட்டால் அது மிகப்பெரிய போர்களுக்கு வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

india,arriving,ukraine,minister,prime minister modi,war ,இந்தியா, வந்தார், உக்ரைன், அமைச்சர், பிரதமர் மோடி, போர்

ரஷ்யாவின் ஆக்ரமிப்பால் நிகழ்ந்துள்ள போரை நிறுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உக்ரைன் பிரதமரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

தொலைபேசியில் மோடியுடன் பேசுமாறும் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வருமாறும் அதிபர் ஜெலன்ஸ்கி அனுப்பிய அழைப்பை மோடியிடன் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உக்ரைனுடன் இந்தியாவின் நட்பை வலுவாக்கவே தாம் இந்தியா வந்திருப்பதாகவும் உக்ரைன் அமைச்சர் எமினி தெரிவித்துள்ளார்

Tags :
|