Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை

திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை

By: Nagaraj Wed, 25 Jan 2023 10:12:23 PM

திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை

ஜம்மு: திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை. அவரது கருத்துக்கள் ஒதுக்கப்பட வேண்டியவை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நடைபெற்றது. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீர் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது.

congress,rahul gandhi,surgical strike, ,காங்கிரஸ், சர்ஜிக்கல் ஸ்டிரைக், ராகுல் காந்தி

ஆனால், அதற்கான ஆதாரங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜனதா அரசு பொய் சொல்லி ஆட்சி செய்கிறது என்றார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த அவரது சந்தேகம் பல்வேறு வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தின் தாக்குதலுக்கு அவர் ஆதாரம் கேட்பது இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது என்று பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை. அவரது கருத்துக்கள் ஒதுக்கப்பட வேண்டியவை. வீரர்கள் தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளோம். அதற்கு வீரர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

Tags :