Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்; சௌந்தர்யா திட்டவட்டம்

காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்; சௌந்தர்யா திட்டவட்டம்

By: Nagaraj Tue, 06 Oct 2020 9:06:05 PM

காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்; சௌந்தர்யா திட்டவட்டம்

காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்... அதிமுக எம்.எல்.ஏ பிரபு தன்னை கடத்தி செல்லவில்லை என்றும், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பிரபுவின் மனைவி சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தியாகதுருகத்தை சேர்ந்த சாமிநாதன் - மாலா தம்பதியின் மகளான சௌந்தர்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் எம்.எல்.ஏ பிரபு தனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது . இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது.

mla,romantic marriage,soundarya,video,opposition ,எம்எல்ஏ, காதல் திருமணம், சௌந்தர்யா, வீடியோ, எதிர்ப்பு

இதையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தீக்குளிக்க முயன்றார். ஆனால் தியாகதுருகம் போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டனர் இதனையடுத்து பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நாளைக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பிரபுவின் மனைவி சௌந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக எம்.எல்.ஏ பிரபு தன்னை கடத்தி செல்லவில்லை, இருவரும் 6 மாதங்களாக காதலித்து வந்தோம். அதற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

Tags :
|
|