Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன படையை எதிர்த்து நள்ளிரவில் கடுமையாகப் போரிட்டோம் - இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை அறிவிப்பு

சீன படையை எதிர்த்து நள்ளிரவில் கடுமையாகப் போரிட்டோம் - இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை அறிவிப்பு

By: Karunakaran Sat, 15 Aug 2020 3:22:57 PM

சீன படையை எதிர்த்து நள்ளிரவில் கடுமையாகப் போரிட்டோம் - இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை அறிவிப்பு

கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய - சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் சீனா இதனை மறுத்தது. அதன்பின், லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது.

லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்களும், படைகளும் குவிக்கப்பட்டன. இருப்பினும் இருதரப்பிலும் பதற்றம் தணியும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைக்குப்பின், படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன்பின், எல்லையில் சற்று அமைதியான நிலை ஏற்பட்டது.

chinese forces,midnight,indo-tibetan border guard,war ,சீனப் படைகள், நள்ளிரவு, இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர், போர்

இந்நிலையில் சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள திறம்பட செயல்பட்டதுடன், முன்னேறி வந்த சீன ராணுவத்தினரையும் கடுமையாக தாக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்ந்த தொழில்திறனுடன் போரிட்ட எங்களது படையினர் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை பின்னுக்கு கொண்டு வந்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் எங்களுடைய படையினர் போர் செய்தபொழுதும், குறைந்த அளவிலேயே எங்கள் தரப்பில் காயமடைந்தனர். இரவு முழுவதும் தீர்மானத்துடன் சீனப்படையை எதிர்த்து நிலைத்து நின்று 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம் என்று இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.

Tags :