Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம்; பதஞ்சலி நிறுவன பாபா ராம்தேவ் அறிவிப்பு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம்; பதஞ்சலி நிறுவன பாபா ராம்தேவ் அறிவிப்பு

By: Nagaraj Tue, 23 June 2020 8:57:30 PM

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம்; பதஞ்சலி நிறுவன பாபா ராம்தேவ் அறிவிப்பு

கொரோனாவுக்கு மருந்து... கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ், இதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது:

corona pharmaceutical,innovation,patanjali institute,announcement ,கொரோனா மருந்து, கண்டுபிடிப்பு, பதஞ்சலி நிறுவனம், அறிவிப்பு

நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். அனைவருமே 100% குணமடைந்துவிட்டனர்.

கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம் என்றார்.

Tags :