கொரோனாவை கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - டிரம்ப்
By: Karunakaran Wed, 23 Sept 2020 3:48:09 PM
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ஏற்கனவே மோதல் நீடித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அது மேலும் அதிகரித்தது. கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வருகிறார். தற்போது, கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக சீனா மீதான தனது தாக்குதலை மீண்டும் கையில் எடுத்து உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை பேச்சுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் தனது உரையை பதிவு செய்த அதிபர் டிரம்ப், நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைத் தொடரும்போது, இந்த நோயை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட நாட்டை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும். வைரஸின் ஆரம்ப நாட்களில், சீனாவை விட்டு வெளியேறி உலகத்தை பாதிக்க செய்ய விமானங்களை அனுமதித்த சீனா உள்நாட்டில் பயணத்திற்கு தடைவிதித்தது என்று கூறினார்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் மீண்டும் ஒரு பெரிய உலகளாவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியான சீன வைரஸுக்கு எதிராக நாம் கடுமையான போரை நடத்தியுள்ளோம். சீன அரசாங்கமும், உலக சுகாதார அமைப்பும் கிட்டத்தட்ட சீனாவால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறியது, மனித பரவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பொய்யாக அறிவித்தனர் என்று அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், அறிகுறிகள் இல்லாதவர்கள் நோயைப் பரப்ப மாட்டார்கள் என்று பொய்யாகக் கூறினர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும். அமெரிக்கா விரைவாக வென்டிலேட்டர்களை வழங்குவதை பதிவுசெய்து, விரைவாக உருவாக்கி, அவற்றை உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதித்து உள்ளது என்று தெரிவித்தார்.