Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாங்கள் பாதுகாப்பாக இருக்க டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம்

நாங்கள் பாதுகாப்பாக இருக்க டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம்

By: Karunakaran Fri, 16 Oct 2020 2:59:02 PM

நாங்கள் பாதுகாப்பாக இருக்க டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம்

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 19 வயது பெண் கடந்த மாதம் உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதன்பின், அந்த உடல், வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

delhi,safe,hathras girl,hathras family ,டெல்லி, பாதுகாப்பு, ஹத்ராஸ் பெண், ஹத்ராஸ் குடும்பம்

இந்நிலையில், பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் “பாதுகாப்பை” உறுதி செய்வதற்காக டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், மேலும் தங்கள் கிராமத்திலிருந்து வெளியேற மாநில அரசு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வெள்ளிக்கிழமை இதுகுறித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர், வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று குடும்பம் விரும்புகிறது, நாங்கள் அங்கு மாற விரும்புகிறோம். இது சம்பந்தமாக அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும், நாங்கள் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். நாங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Tags :
|
|