Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவோம்... நிதியமைச்சு உறுதி

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவோம்... நிதியமைச்சு உறுதி

By: Nagaraj Sat, 04 Mar 2023 9:49:39 PM

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவோம்... நிதியமைச்சு உறுதி

கொழும்பு: நிதியமைச்சு தகவல்... உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

interim prohibition,order,issue,government printer,finance,election ,இடைக்காலத் தடை, உத்தரவு, பிறப்பிப்பு, அரசு அச்சகர், நிதி, தேர்தல்

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Tags :
|
|