இந்து என்ற வார்த்தையை தொடர்ந்து வலியுறுத்துவோம்... ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
By: Nagaraj Thu, 06 Oct 2022 10:45:03 AM
புதுடெல்லி: சிலர் இந்து என்ற சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு வார்த்தைகளை பயன்படுத்த விரும்புகிறார்கள். தெளிவுக்காக, இந்து என்ற வார்த்தையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற தசரா பேரணியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: மக்கள்தொகை வளர்ச்சிக்கு வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால் அது நாட்டுக்கு பெரும் சுமையாக அமையும்.
மக்கள்தொகையை ஒரு சொத்தாகக் கருதும் மற்றொரு பார்வை நம் நாட்டில் உள்ளது. இந்த 2 அம்சங்களையும் மனதில் வைத்துக்கொண்டு அனைவருக்கும் வேலை செய்யும் மக்கள்தொகைக் கொள்கையை நாம் கொண்டு வர வேண்டும்.
அதாவது, அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பொருந்தக்கூடிய பரந்த மக்கள்
தொகைக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். மத அடிப்படையிலான மக்கள் சமத்துவமின்மை
என்பது புறக்கணிக்கப்படக் கூடாத ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
சிலர்
இந்து என்ற சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு வார்த்தைகளை பயன்படுத்த
விரும்புகிறார்கள். தெளிவுக்காக, இந்து என்ற வார்த்தையை தொடர்ந்து
வலியுறுத்துவோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.