மாற்றுத்திறனாளி ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம்; கமல் உறுதி
By: Nagaraj Sun, 27 Dec 2020 8:48:04 PM
கமல் உறுதி... மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேசும்பொழுது,
தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள்.
தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே எங்களது
திட்டம்.
மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக
நிறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள்
மத்தியில் கமலின் மரியாதையை உயர்த்தி உள்ளது.