அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு
By: vaithegi Thu, 09 Feb 2023 5:53:05 PM
சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை .... தமிழகத்தில் கடந்தாண்டு மாண்டாஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்தன. மேலும் பெரும்பாலான பயிர் நிலங்கள் சேதமடைந்தன. இதையடுத்து தற்போது பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது.
எனவே அதன்படி தற்போது, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுவதுடன் பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது. இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இந்த அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.