Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு வலை

முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு வலை

By: Nagaraj Wed, 22 July 2020 11:58:05 AM

முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு வலை

முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற, முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே பண்டபள்ளி கொத்தூரை சேர்ந்தவர் முனுசாமி. கூலித் தொழிலாளி. இவரது தம்பி மனைவிக்கும், அதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், தற்போது பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருபவருமான மூர்த்தி என்பவருக்கும், நான்கு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இது குறித்து முனுசாமி, அவரது தம்பியிடம் கூறியுள்ளார். இதனால் முனுசாமிக்கும், முன்னாள் ராணுவ வீரர் மூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் முனுசாமி பண்டப்பள்ளி கொத்தூர் சாலையில், படேதலாவ் ஏரி வாய்க்கால் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

prejudice,ex-serviceman,gun,prosecution ,முன்விரோதம், முன்னாள் ராணுவ வீரர், துப்பாக்கி, வழக்குப்பதிவு

அப்போது அவ்வழியே காரில் வந்த மூர்த்தி, முனுசாமியிடம் தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, காரில் வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து, முனுசாமியை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அங்கு வந்த முனுசாமியின் மகன் நரசிம்மன் அதை தடுத்துள்ளார். இதனால் குறி தவறியது. இதையடுத்து, மூர்த்தியை பிடிக்க நரசிம்மன் முயற்சி செய்துள்ளார்.

அதற்குள் அங்கிருந்து மூர்த்தி, காரில் ஏறி தப்பினார். இது குறித்து முனுசாமி, அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் மூர்த்தியை தேடி வருகிறார்.

Tags :
|