அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதானா என மேற்கு வங்க முதல்வர் கேள்வி
By: Karunakaran Fri, 05 June 2020 6:40:15 PM
கொரோனா மற்றும் அம்பன் புயலால் மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான சூழலில் இருந்து மக்களை மீட்க அம்மாநில அரசு போராடி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், நாங்கள் கொரோனா மற்றும் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு கொண்டு வருவதில் போராடி வருகிறோம். சில அரசியல் கட்சிகள் எங்களை அகற்றுமாறு கேட்கின்றன. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நாங்கள் தரையில் இறங்கி வேலை செய்து கொண்டிருகிறோம். அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதானா? கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் எங்கே இருந்தார்கள்? கொரோனா மற்றும் சதி ஆகிய இரண்டிற்கும் எதிராக மேற்கு வங்க அரசு நிச்சயம் வெல்லும் என்று கூறினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.