Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்க கவர்னருக்கு நெஞ்சுவலி... சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

மேற்கு வங்க கவர்னருக்கு நெஞ்சுவலி... சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

By: Nagaraj Sat, 01 Oct 2022 7:26:01 PM

மேற்கு வங்க கவர்னருக்கு நெஞ்சுவலி... சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: மேற்கு வங்க கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு கவர்னரான இல.கணேசன் இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

governor,ill health,hospital,treatment,expectation ,கவர்னர், உடல்நிலை பாதிப்பு, மருத்துவமனை, சிகிச்சை, எதிர்பார்ப்பு

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னர் இல.கணேசன் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :