மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கொரோனா வைரசுக்கு பலி
By: Karunakaran Mon, 17 Aug 2020 5:22:24 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரையும் பாரபட்சமின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்க்கு 71 வயதாகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுக்கு அவருக்கு இருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சமரேஸ் தாஸ் மறைவுக்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பினால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், எம்.எல்.ஏவுமான தமோனாஸ் கோஷ் உயிரிழந்தார். 60 வயதான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.