Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா முதல்வர் மகள் நிறுவனத்துக்கு வந்த பணம் எதற்காக? காங்கிரஸ் எழுப்பிய சர்ச்சை

கேரளா முதல்வர் மகள் நிறுவனத்துக்கு வந்த பணம் எதற்காக? காங்கிரஸ் எழுப்பிய சர்ச்சை

By: Nagaraj Thu, 10 Aug 2023 3:31:14 PM

கேரளா முதல்வர் மகள் நிறுவனத்துக்கு வந்த பணம் எதற்காக? காங்கிரஸ் எழுப்பிய சர்ச்சை

கேரளா: முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் நிறுவனத்துக்கு ரூ 1.72 கோடி எப்படி வந்தது? எந்த சேவைக்காக இந்தப் பணம் வழங்கப்பட்டது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா தனது நிறுவனத்திற்கு கொச்சியில் உள்ள ஒரு தனியார் கனிம நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 72 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக பரவிய தகவல் கேரள அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

controversy,congress party,chief ministers daughter,institute,emphasis ,சர்ச்சை, காங்கிரஸ் கட்சி, முதல்வர் மகள், நிறுவனம், வலியுறுத்தல்

சில சேவைகளின் பெயரால் இந்தப் பணம் பெறப்பட்டதாக வீணா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் எந்த சேவையும் வீணாவின் நிறுவனம் செய்ததாக ஆதாரம் இல்லை என்பதால் இது லஞ்சம் வாங்கிய பணமா என்று நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தப் புகார்கள் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பினராயி விஜயன் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags :