Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கான்பூரில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல்; போலீசார் 8 பேர் பலி

கான்பூரில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல்; போலீசார் 8 பேர் பலி

By: Nagaraj Fri, 03 July 2020 09:47:38 AM

கான்பூரில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல்; போலீசார் 8 பேர் பலி

ரவுடியின் வீட்டிற்கு ரெய்டு சென்ற போது அவனது ஆட்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 8 போலீசார் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கான்பூரில் விகாஷ் துபே என்ற பயங்கரமான ரவுடியின் வீட்டிற்கு போலீஸ் ரெய்டு சென்ற போது, அந்த ரவுடியின் ஆட்கள் போலீசாரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் விகாஷ் துபே என்ற பிரபல ரவுடி மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவனை தேடி 15-16 பேர் கொண்ட போலீஸ் குழு அவனது வீட்டிற்கு சென்றது.

kanpur,gunmen,8 policemen,killed ,கான்பூர், துப்பாக்கிச்சூடு, 8 போலீசார், கொல்லப்பட்டனர்

அப்போது ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி நின்றிருநத துபேவின் ஆட்கள் திடீரென ஜேசிபியை சாலையின் நடுவழியில் வைத்து மறித்ததுடன் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் வருவது குறித்து தகவல் தெரிந்திருந்ததால்தான் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் குழு வந்த போது அவர்களை திட்டமிட்டு சரமாரியாக சுட்டு விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

போலீசார் மீது தாக்குதல் நடந்த உடனேயே, எஸ்.எஸ்.பி தினேஷ்குமார், எஸ்.பி. (மேற்கு) டாக்டர் அனில் குமார் மற்றும் மேலும் மூன்று எஸ்.பிக்கள். தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். விகாஷ் துபே வசித்த பகுதி முழுவதும் உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 8 போலீஸ்காரர்களை ரவுடிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|