Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்? இன்று முக்கிய ஆலோசனை

மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்? இன்று முக்கிய ஆலோசனை

By: Monisha Mon, 20 July 2020 09:56:50 AM

மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்? இன்று முக்கிய ஆலோசனை

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்? என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? (ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்), மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு 20-ந்தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

schools,colleges,department of school education,parents ,பள்ளிகள், கல்லூரிகள்,பள்ளிக்கல்வி துறை,பெற்றோர்

இந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து கருத்துகளை கல்வித்துறை பெற்று இருக்கிறது. பெற்றோரின் கருத்துகளையும், மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கல்வித்துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பெற்றோரும் நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில் கடந்த 15-ந்தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் பள்ளிகள் திறப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆலோசனை நடத்தியது. அதில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசைப்போல, அண்டை மாநிலமான தெலுங்கானாவும் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளது.

Tags :