Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித் தேர்வு ... தாள்-2-க்கான தேர்வு எப்போது நடத்தப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு ... தாள்-2-க்கான தேர்வு எப்போது நடத்தப்படும்?

By: vaithegi Tue, 03 Jan 2023 9:16:40 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு    ...   தாள்-2-க்கான தேர்வு எப்போது நடத்தப்படும்?

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (டெட்) 2 கட்டங்களாக நடத்தி கொண்டு வருகிறது. இதையடுத்து இதில் தாள்-1 தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. எனவே அதன்படி, தாள்-1 தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு கம்ப்யூட்டர் வாயிலாக கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தது.

இதனை அடுத்து இத்தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் எழுதியதில், 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

teacher eligibility test,examination board ,ஆசிரியர் தகுதித் தேர்வு  ,தேர்வு வாரியம்

தாள்-2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கம்ப்யூட்டர் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, தேர்வு வருகிற 31-ந்தேதி தொடங்கி (பிப்ரவரி) 12-ந்தேதி வரை நடத்தப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வு கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த அறிவிப்பு வருகிற 3-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், இந்த தேர்வுக்கான பயிற்சித் தேர்வு பெற விரும்புபவர்களுக்கு தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :