Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் .. டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியீடு

கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் .. டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியீடு

By: vaithegi Wed, 28 June 2023 2:40:37 PM

கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும்  ..   டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

எனவே அதன்படி, கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. இதையடுத்து அதன் விவரம் இதோ : குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பரில் வெளியாகும். அதேபோன்று, குரூப்-1 பதவிகளில் 95 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மை தேர்வு ஆக.10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

examination,tnpsc ,தேர்வு ,டிஎன்பிஎஸ்சி

மேலும் இதுதவிர, 10 வன பயிற்சியாளர், 178 உதவி பிரிவு அலுவலர், 731 கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர், 11 மாவட்ட கல்விஅலுவலர், 9 உதவி வன பாதுகாவலர், 27 நூலகர், 121 வேளாண் அலுவலர் மற்றும் குரூப்-3 பிரிவில் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவை துறையில் 33, புள்ளியியல் துறையில் 217 பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படவுள்ளன.

இதேபோன்று, 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1,083 ஒருங்கிணைந்த பொறியியல் துறை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும். மீன்வளத் துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 11, 12-ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :