சென்னையில் வெளுத்தெடுத்த மழை... சாலைகளில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி
By: Nagaraj Tue, 31 Oct 2023 2:11:40 PM
சென்னை: சென்னை வடபழனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனை அடுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மழைநிற்காமல் பெய்ததால் அப்பகுதியில் இருக்கும் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனத்தை ஒட்டி செல்வோர்கள் பெரும் அவதியடைந்தனர்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருக்கிறது.