Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னை நீக்க நீங்கள் யார்... உங்களை நான் நீக்குகிறேன்: ஓ.பி.எஸ். பதிலடி

என்னை நீக்க நீங்கள் யார்... உங்களை நான் நீக்குகிறேன்: ஓ.பி.எஸ். பதிலடி

By: Nagaraj Mon, 11 July 2022 7:17:55 PM

என்னை நீக்க நீங்கள் யார்... உங்களை நான் நீக்குகிறேன்: ஓ.பி.எஸ். பதிலடி

சென்னை: தன்னை கட்சியில் இருந்து விலக்கிய எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியை விட்டு விலக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குதான் மேற்கண்டவாறு பதிலடி தந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

o. panneer selvam,edappadi,special resolution,deleted,response ,ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி, சிறப்பு தீர்மானம், நீக்கினர், பதிலடி

அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டி பேசுவதும், அக்கட்சி தலைவர்களுடன் நட்பு வைத்து கொண்டு கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அமைச்சரவை கூட்டு பொறுப்பு என்பது தெரிந்தும், அதிமுக அரசின் செயல்களை விமர்சித்து பேசியும், விளம்பரம் கொடுத்தது ஆகிய பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சிக்கு எதிரானது. இதனால் பொருளாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.

அதேபோல் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பி.எச்.பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வம் நான் கழக சட்டப்படி கோடிக்கணக்கான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ யாருக்கும் உரிமை இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :