Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்கு அம்மை நோயை கண்காணிக்க உலக சுகாதார மையம் வலியுறுத்தல்

குரங்கு அம்மை நோயை கண்காணிக்க உலக சுகாதார மையம் வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 17 Aug 2022 09:46:03 AM

குரங்கு அம்மை நோயை கண்காணிக்க உலக சுகாதார மையம் வலியுறுத்தல்

டெஹ்ரான்: சுகாதார மையம் அறிவுறுத்தல்... அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது. உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

monkey measles,disease incidence,isolation,treatment,ministry of health,iran ,குரங்கு அம்மை, நோய் பாதிப்பு, தனிமை, சிகிச்சை, சுகாதார அமைச்சகம், ஈரான்

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :