Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள் - காங்கிரஸ் கட்சி கேள்வி

எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள் - காங்கிரஸ் கட்சி கேள்வி

By: Karunakaran Sun, 16 Aug 2020 2:33:46 PM

எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள் - காங்கிரஸ் கட்சி கேள்வி

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். எல்லை மோதல்கள் குறித்து அவர் பேசுகையில், இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாக கூறினார்.

எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் பிரதமர் மோடி கூறினார். ஆனால் அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை தற்போது காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. பிரதமர் மோடி சீனாவின் பெயரை சொல்வதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா சாடியுள்ளார்.

china,border conflict,congress party,modi ,சீனா, எல்லை மோதல், காங்கிரஸ் கட்சி, மோடி

இதுகுறித்து ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சீனா, நமது பிரதேசத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. சீன படைகளை விரட்டியடித்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க என்ன திட்டத்தை முன் வைத்திருக்கிறது என்று அரசை நாம் கட்டாயம் கேட்க வேண்டும். சுய சார்பு இந்தியா பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்து தந்தவர்கள், பண்டித ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள்தான் என்று கூறினார்.

மேலும் அவர், சுயசார்பு இந்தியா பற்றி பேசிக்கொண்டு, 32 பொதுத்துறை நிறுவனங்களை விற்று விட்டார்கள். ரெயில்வேயையும், விமான நிறுவனங்களையும் தனியார் துறையிடம் தாரை வார்த்து வருகிறார்கள். இதுபற்றி அரசாங்கத்தை கேட்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Tags :
|