Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

By: Nagaraj Mon, 07 Aug 2023 3:48:42 PM

காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

மதுரை: காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தாதது ஏன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் பெங்களூருக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் திறக்க வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கோரி கர்நாடக முதல்வரிடம் ஏன் வலியுறுத்தவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

annamalai,question,chief minister stalin,jewelery loan,waiver ,அண்ணாமலை, கேள்வி, முதல்வர் ஸ்டாலின், நகை கடன், தள்ளுபடி

என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை மதுரை திருநகரில் 10வது நாள் யாத்திரையை இன்று தொடங்கி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நிறைவு செய்தார்.

அங்கு பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, 68 சதவீத பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யாததைப்போல, மகளிர் உரிமைத் தொகையையும் அவர்களால் முழுமையாக வழங்க முடியாது என கூறினார்.

Tags :