Advertisement

ஜனாதிபதியை அழைக்காதது ஏன்... திரிணாமுல் எம்.பி., கேள்வி

By: Nagaraj Wed, 20 Sept 2023 2:54:57 PM

ஜனாதிபதியை அழைக்காதது ஏன்... திரிணாமுல் எம்.பி., கேள்வி

புதுடெல்லி: புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார். இந்நிலையில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ceremony,boycott,president,trinamool question,raised ,
விழா, புறக்கணிப்பு, ஜனாதிபதி, திரிணாமுல் கேள்வி, எழுப்பினார்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக்கப்பட்டாரா? ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :