Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் - விவசாயிகள் வேதனை

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் - விவசாயிகள் வேதனை

By: Monisha Sat, 21 Nov 2020 4:29:15 PM

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் - விவசாயிகள் வேதனை

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கூடலூர் தாலுகா பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரண்டு காட்டு யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த யானைகள் அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின. மேலும் அந்தப்பகுதியிலேயே சுற்றித் திரிகிறது. பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அச்சத்துடன் இருக்கக் கூடிய நிலை நீடித்துள்ளது.

crops,wild elephants,farmers,pain,damage ,பயிர்கள்,காட்டு யானைகள்,விவசாயிகள்,வேதனை,சேதம்

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- காட்டுயானைகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்துளனர். ஆனால் எங்கள் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவித்தாலும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

இதனால் தினமும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. மேலும் அதற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினாலும், எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே காட்டு யானைகளை நிரந்தரமாக வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர்கள் கூறினர்.

Tags :
|
|