Advertisement

பெருவில் தொல்லியல் பூங்கா அருகே ஏற்பட்ட காட்டுத்தீ

By: Nagaraj Mon, 12 Oct 2020 3:57:42 PM

பெருவில் தொல்லியல் பூங்கா அருகே ஏற்பட்ட காட்டுத்தீ

காட்டுத்தீ... பெருவில் சாக்சயுவமான் தொல்லியல் பூங்காவிற்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருவின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயால் 700 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில், கஸ்கோ பகுதியில் உள்ள தொல்லியல் பூங்கா பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அந்த பகுதியில் பலத்த காற்றும் வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :