Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் தொடர்ந்து ஏற்படும் பேரழிவு

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் தொடர்ந்து ஏற்படும் பேரழிவு

By: Karunakaran Wed, 30 Sept 2020 7:33:45 PM

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் தொடர்ந்து ஏற்படும் பேரழிவு

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது. கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

இந்த ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு கலிபோர்னியாவில் தற்போது காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

wildfires,wreak havoc,california,america ,காட்டுத்தீ, அழிவு, கலிபோர்னியா, அமெரிக்கா

தற்போது, கலிபோர்னியாவின் வடக்குப்பகுதியில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென புதிதாக காட்டுத்தீ உண்டானது. முதலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த நெருப்பு அடுத்த சில மணி நேரங்களில் 4 மடங்காக கொழுந்து விட்டு எரிகிறது. ‘கிளாஸ் பயர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெருப்பு மேலும் தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரு நெருப்பு காரணமாக நாபா பள்ளத்தாக்கு, கலிஸ்டோகா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாபா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 37 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

Tags :